நம்பிக்கை

துவண்டு கிடந்த என் மனம் துளிர்த்த கதை..
இலையுதிர் காலத்திலே
இணையற்ற துன்பத்தோடு நான்
தளர்ந்திருந்த வேளையிலே
வீசிய தென்றல் மனதைக் குளிர்விக்க
விர்ரென காற்றிலே உதிர்ந்த இலைகள்
விரக்தியில் துவண்டிருந்த என்னை நோக்கி

” என்னை இழக்கும் மரம் மீண்டும் துளிர்க்கிறதே..
நீ மட்டும் சிறு தோல்விக்கே துவளுவது ஏனோ?! “

என்றவாறு கேள்விக்கணையை
என் மனதிலே இறக்கிவிட்டு
மண்ணுக்கு உரமாய் நிலத்திலே அமிழ்ந்தன..