என் காதல்

காதலித்துப் பார் ,
உனக்குள்ளும் கவிஞன் உதிப்பான்
சிந்தனைகள் தெளிவுறும்
தயக்கங்கள் தகர்ந்துவிடும்.

காதலித்துப் பார்
ஒற்றுப்பிழை கண்ணை உறுத்தும்
மொழிக்கொலை நெஞ்சை குத்தும்..

காதலித்துப் பார்
உன் தாய் மொழியை காதலித்துப் பார்!!

—–எனக்குள் உதித்த கவிஞனின் சிறு எழுத்தாணி கிறுக்கல்கள்…